உள்ளுராட்சி மன்ற வாக்குகள் திரிபுபடுத்தலாக மாறியுள்ளதால் பழைய முறையிலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர்;
“.. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் பலர் கூச்சலிட்டனர். தற்போது உள்ளூராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எல்லை நிர்ணயம் செய்து வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் பழைய முறையிலேயே வாக்களிக்க வேண்டும். இது ஒரு திரிபு.
பொஹொட்டுவ பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவினர் இன்று சுயேச்சையாக பதவியேற்றுள்ளனர். அவர்களுக்காக கூட்டங்கள் நடத்தச் சென்றபோது பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டோம். பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எவ்வாறாயினும் பொஹொட்டுவ வாக்குகளுக்கு அஞ்சவில்லை.
இந்நாட்டில் பத்து சதவீத மக்கள் போராடினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் இப்போது வசந்த முதலிகே பற்றி பேசுகிறார். 88, 89 பயங்கரவாதத்தின் போது தெருக்களில் அறுபதாயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களைக் கொல்லவில்லை. அவர் என்ன சொன்னாலும், ரணில் விக்கிரமசிங்க ஒரு தலைவர் என்ற முறையில் முதுகை நிமிர்த்தி, தான் சொல்ல விரும்புவதைக் கூறினார்…”