follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடு"பால் மா இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை"

“பால் மா இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை”

Published on

பால் மா இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை எனவும், அதற்கமைய சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பால் மாவை உள்ளடக்கியதாக கூறப்படும் 6 கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்காத விவகாரம் தொடர்பில் இன்று (29) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த பால் மா அடங்கிய கொள்கலன்களில் பால் தேநீர் மற்றும் சொக்லேட் உற்பத்திக்கான பால் மா கையிருப்பு உள்ளதாகவும் அது இலங்கையில் கிடைக்கும் அந்நிய செலாவணியைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...