பால் மா இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை எனவும், அதற்கமைய சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பால் மாவை உள்ளடக்கியதாக கூறப்படும் 6 கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்காத விவகாரம் தொடர்பில் இன்று (29) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த பால் மா அடங்கிய கொள்கலன்களில் பால் தேநீர் மற்றும் சொக்லேட் உற்பத்திக்கான பால் மா கையிருப்பு உள்ளதாகவும் அது இலங்கையில் கிடைக்கும் அந்நிய செலாவணியைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.