follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு"பால் மா இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை"

“பால் மா இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை”

Published on

பால் மா இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை எனவும், அதற்கமைய சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பால் மாவை உள்ளடக்கியதாக கூறப்படும் 6 கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்காத விவகாரம் தொடர்பில் இன்று (29) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த பால் மா அடங்கிய கொள்கலன்களில் பால் தேநீர் மற்றும் சொக்லேட் உற்பத்திக்கான பால் மா கையிருப்பு உள்ளதாகவும் அது இலங்கையில் கிடைக்கும் அந்நிய செலாவணியைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...