குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று(29) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று(29) அதிகாலை ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது செய்யப்பட்டார்.