follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநெருக்கடியில் இருந்து மீள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் அவசியம்

நெருக்கடியில் இருந்து மீள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் அவசியம்

Published on

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வது தற்போதைய கொள்கையாக அமைய வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டிற்கு பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைத் தவிர்த்து, சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு நாடு அந்நியச் செலாவணி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் அவசியம். உலகமயமாக்கலின் கீழ், உலகில் எந்த ஒரு நாடும் தனியாக வளர்ச்சியடைய முடியாது, ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் கட்டாயமாக ஒப்பந்தங்களை மேற்கொள்வது காலத்தின் அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், இவ்வாறான உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் தேவையான முன்நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...