follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுசீனாவிடம் இருந்து 7.4 பில்லியன் டொலர் கடன் பெற்ற இலங்கை

சீனாவிடம் இருந்து 7.4 பில்லியன் டொலர் கடன் பெற்ற இலங்கை

Published on

2021ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை சீனாவிடம் இருந்து சுமார் 7.4 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ளதாக  சீன, ஆபிரிக்கா ஆய்வு முனைப்பு அமைப்பு (CARI) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை இலங்கையின் மொத்தக் கடனில் சுமார் 20வீதம் என சீன, ஆபிரிக்கா ஆய்வு முனைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பல சந்தர்ப்பங்களில் அபிவிருத்தி நோக்கங்களுக்காக சீனாவின் எக்சிம் வங்கியின் ஊடாக கடன்களைப் பெற்றுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அண்மைய நாட்களில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சீன அரசாங்கம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு நிதி பரிமாற்ற வசதியை வழங்கியது.

இந்த நிதி பரிமாற்ற வசதி, சீன யுவான் நாணயத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டது. மேலும் அந்த பணத்தை செலவழிப்பதற்கு பல ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...