follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுதிலினிக்கு துபாய் நாட்டிலும் வர்த்தக நிறுவனம்

திலினிக்கு துபாய் நாட்டிலும் வர்த்தக நிறுவனம்

Published on

தொழில் விவகாரங்களில் முதலீடு செய்து அதிக பலன் தருவதாக கூறி பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை ஏமாற்றி 1.3 பில்லியன் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன மற்றும் கசுன் பெரேரா ஆகிய மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (30) உத்தரவிட்டார்.

அந்த வழக்குகளின் ஏனைய சந்தேக நபர்களான பொரல்லாலே சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

திலினி பிரியமாலி மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக ஏழு முறைப்பாடுகள் தமது திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

திலினி பிரியமாலி துபாய் நாட்டில் வர்த்தக நிறுவனமொன்றை பதிவு செய்து மோசடியாக சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி வர்த்தகம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியில் தகவல் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது. மற்றும் சர்வதேச பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...