follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகட்டாரில் 343 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழப்பு

கட்டாரில் 343 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழப்பு

Published on

2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக (SLBFE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கான காரணம் இயற்கை மரணம், தற்கொலை, கொலை, வீதி விபத்து, ஏனைய விபத்துகள், கொரோனா இறப்புக்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத மரணங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி, 207 இயற்கை மரணங்கள், 30 தற்கொலை இறப்புகள், 6 வீட்டுக் கொலைகள், 50 வீதி விபத்துகள், 35 ஏனைய விபத்துகள், 14 கொரோனா வைரஸ் இறப்புகள் மற்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 29 இயற்கை மரணங்கள், 4 தற்கொலைகள், ஒரு கொலை, 12 வீதி விபத்துகள் மற்றும் 6 உறுதிப்படுத்தப்படாத மரணங்கள் பதிவாகியுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல 2020இல் மிகக் குறைவான இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 13 இயற்கை மரணங்கள், 2 தற்கொலை மரணங்கள், 3 இல்லக்கொலை மரணங்கள், 2 விபத்துக்கள் மற்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் மாத்திரம் 37 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...