follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுயானை புத்தகத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உத்தரவு

யானை புத்தகத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உத்தரவு

Published on

யானைகளை பதிவு செய்யும் ´யானை புத்தகம்´ எனும் ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகளை பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வௌியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இன்று முதல் 10 நாட்களுக்குள் குறித்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.