கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து ஒன்று இன்று (05) அதிகாலை கிளிநொச்சி 155 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் 23 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
வீதியில் பயணித்த மாட்டின் மீது மோதி பேரூந்து கவிழ்ந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.