ரணில் சாதித்து விட்டார் – பசில், ஜனாதிபதி குறித்து கூறியது

728

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்த தீர்மானம் சரியானது என அக்கட்சியின் தேசிய அமைப்பின் உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், அனைத்துக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் சுதந்திரமாகப் பேச அனுமதிக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் கருத்து என்றார்.

தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினால் நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்ல முடியுமா என ஊடகவியலாளர்கள் இங்கு வினவினார்கள்.

அதற்குப் பதிலளித்த பசில் ராஜபக்ஷ, முதல் காரியத்தை செய்துவிட்டு வீதியில் இறங்கி அரசியல் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்புகின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here