follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதிருமணத்திற்கு முந்தைய உடலுறவுக்கு கடுமையாக தண்டனை

திருமணத்திற்கு முந்தைய உடலுறவுக்கு கடுமையாக தண்டனை

Published on

திருமணத்திற்கு முன் பாலுறவில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த இந்தோனேசியா தயாராகி வருகிறது.

இது கிரிமினல் சட்டமாக இருக்கும் என்றும், இது அடுத்த வாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதும், திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வதும் இந்த சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும். இது தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றவாளிகள் மீது முறைப்பாடுகள் வந்தால் மட்டுமே இந்த தண்டனைகள் வழங்கப்படும். திருமணமான தம்பதிகள் விஷயத்தில், சம்பந்தப்பட்ட நபரின் கணவன் அல்லது மனைவி முறைப்பாடு செய்ய உரிமை உண்டு. திருமணமாகாத நபர்களின் பெற்றோருக்கு இவ்வாறு முறைப்பாடு செய்ய உரிமை உண்டு.

இந்த சட்டம் இந்தோனேசியர்கள் மற்றும் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினரை பாதிக்கும். இத்தகைய சட்டங்கள் இந்தோனேசியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று சில பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர். இது சுற்றுலாத் துறையையும், வணிகத் துறையையும் பாதிக்கும் என்கிறார்கள். எப்படியிருந்தாலும், இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட அந்நாட்டின் நீதித்துறை துணை அமைச்சர் ஒமர் ஷெரீப் ஹைரிஜ், இந்தோனேசியாவின் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் சட்ட அமைப்பைக் கொண்டிருப்பது பெருமையாக இருக்கும் என்று கூறினார்.

சில ஊடக அறிக்கைகளின்படி, பாலியல் உறவுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் பல சட்டங்களை பாராளுமன்றம் கொண்டு வர தயாராகி வருகிறது. அவற்றில் ஜனாதிபதி மற்றும் அரச நிறுவனங்களை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரை அவமதிப்பது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். எவ்வாறாயினும், இந்த வகையான குற்றம் தொடர்பாக ஜனாதிபதி மட்டுமே முறைப்பாடு அளிக்க முடியும்.

இந்தோனேசியா இத்தகைய சட்டங்களை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பது இது முதல் முறையல்ல. 2019 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள் போன்ற கட்சிகள் பெருமளவில் போராட்டங்களில் கலந்துகொண்டதுடன், அரசாங்கம் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி போராட்டத்தை அடக்கியது. சில பாரம்பரியக் குழுக்கள் இந்தப் புதிய சட்டங்களை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் சிவில் உரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...