follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த சக மாணவன் உட்பட 4 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த சக மாணவன் உட்பட 4 பேர் கைது

Published on

மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லனிய வத்த மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து,போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்பட்ட ,பாடசாலை மாணவன் உட்பட நான்கு சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவன் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் மற்றும் போதைப்பொருள் விநியோகித்த மாணவர் ஒருவருடன் நால்வரே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

பதினெட்டு வயது பாடசாலை மாணவன் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவனுக்கு அவனது தாய் உறுதுணையாக இருந்தமை விசாரணிகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்கள் மில்லனிய பொலிஸிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...