follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுLPL போட்டிகள் இன்று முதல்

LPL போட்டிகள் இன்று முதல்

Published on

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் கட்ட போட்டிகள் இன்று (06) முதல் ஆரம்பமாகவுள்ளன.

இலங்கையினுள் இடம்பெறும் சர்வதேச மட்டத்திலான ஒரேயொரு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இதில் 05 அணிகள் பங்குபற்றுகின்றன.

இந்த வருட லங்கா பிரீமியர் லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ், யாழ் கிங்ஸ், கோல்ட் கிளாடியேட்டர்ஸ், கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புள்ளை அவுரா ஆகிய அணிகள் போட்டியிடுவதுடன், இந்த அணிகள் ஒவ்வொன்றிலும் உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

18 நாட்கள் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியில் 24 போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் போட்டிகள் சூரியவெவ, பல்லேகல மற்றும் கெத்தாராமை மைதானங்களில் நடைபெறவுள்ளன.

போட்டியின் இறுதிப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

யாழ் கிங்ஸ் அணிக்கும் கோல்ட் கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின் ஆரம்ப போட்டி இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...