தனியாக இல்லாது கூட்டாக அரசில் இணைய ராஜித விருப்பம்

445

மக்களை பட்டினியிலிருந்து விடுவிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனித்து ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், வேறு ஒரு குழுவுடன் இணைந்து ஆதரவளிக்கப் போவதாகவும் கூறிய அவர், அது கூட்டணியாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

உணவு கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நேரத்தில் அரசியல் பேசக்கூடாது என்றார்.

இறுதி யுத்தத்தின் போது நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளான போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஆதரவளித்ததாகவும், தற்போது அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here