follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP3உள்ளூராட்சி தேர்தல் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி தேர்தல் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும்

Published on

உள்ளூராட்சி தேர்தலை 2023 ஜனவரி 5 ஆம் திகதி அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், மார்ச் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்குள் 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பின்னர் கொழும்பு மாவட்டம் மாத்திரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசாரணைக்கு எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறிய வாக்கெடுப்பை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக புஞ்சிஹேவா குறிப்பிட்டார். அதற்கு எதிராக யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால் SCFR/35/2016 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உச்சநீதிமன்றம் அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும், எனவே கட்டாயமாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...