follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP3உள்ளூராட்சி தேர்தல் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி தேர்தல் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும்

Published on

உள்ளூராட்சி தேர்தலை 2023 ஜனவரி 5 ஆம் திகதி அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், மார்ச் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்குள் 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பின்னர் கொழும்பு மாவட்டம் மாத்திரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசாரணைக்கு எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறிய வாக்கெடுப்பை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக புஞ்சிஹேவா குறிப்பிட்டார். அதற்கு எதிராக யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால் SCFR/35/2016 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உச்சநீதிமன்றம் அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும், எனவே கட்டாயமாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...