follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபம்பலப்பிட்டியில் STF எனக்கூறி 27 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

பம்பலப்பிட்டியில் STF எனக்கூறி 27 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

Published on

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் (STF) எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் எனக் கூறி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது காரின் உரிமையாளரிடம் இருந்து 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் கார் உரிமையாளரும் மற்றுமொரு நபரும் இணைந்து தப்பியோடிய நபரை பொன்சேகா வீதியில் வைத்து பிடித்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...