follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுநத்தல் அலங்காரப் பொருட்களின் விலை மும்மடங்காக உயர்வு

நத்தல் அலங்காரப் பொருட்களின் விலை மும்மடங்காக உயர்வு

Published on

கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அலங்கார பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இரண்டு அடி உயர செயற்கை கிறிஸ்துமஸ் மரம் ரூ.200ல் இருந்து ரூ.2000 ஆகவும், 4 அடி கிறிஸ்துமஸ் மரம் ரூ.800ல் இருந்து ரூ.5500 ஆகவும், 7 அடி கிறிஸ்துமஸ் மரத்தின் விலை ரூ.6000ல் இருந்து ரூ.23000 ஆகவும் உயர்ந்துள்ளது.

250 முதல் 600 ரூபாய்க்கு மேல் மின்விளக்குகள், ஸ்டீமர்கள் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலைநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் இயற்கை கிறிஸ்மஸ் மரத்தின் விலை இரண்டாயிரத்தை தாண்டும் என வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு இம்முறை குறைந்த விலையில் அவற்றை வழங்குவது சாத்தியமற்றது எனவும் அவர்கள் மேலும் வலியுறுத்துகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...