follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமீண்டும் முகக்கவசம் அணிய கோரிக்கை

மீண்டும் முகக்கவசம் அணிய கோரிக்கை

Published on

நாட்டில் இந்நாட்களில் காணப்படும் மூடுபனி அல்லது பனி இயற்கையான நிகழ்வு அல்ல, ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

அசுத்தமான காற்றை இந்தியாவிலிருந்து வீசும் காற்று காரணமாக இப்பகுதி காற்று தரக் குறியீட்டில் (AQI) 200க்கு மேல் பதிவு செய்து வருகிறது.

கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளின் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

AQI சுட்டெண் யாழ்ப்பாணத்தில் 212 ஆகவும், கம்பஹாவில் 189 ஆகவும், தம்புள்ளையில் 170 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டி 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 157 ஆகவும் இருந்தது.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்தது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...