follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஉயர்தரப் பரீட்சையின் போது மின் துண்டிப்பு இடம்பெறலாம்

உயர்தரப் பரீட்சையின் போது மின் துண்டிப்பு இடம்பெறலாம்

Published on

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க கடுமையாக முயற்சிப்போம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைக் காலத்தில் மின்வெட்டை தவிர்ப்பதற்காக செயற்படுகின்றார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை இயக்க வேண்டும் எனவும் அதற்கமைவாக ஒரு அலகு 90 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் ஆலைகளை இயக்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளைப் பெற வேண்டும் எனவும், அந்த எரிபொருளை கூட்டுத்தாபனத்திடம் கடனாகப் பெற்றால் அது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...