கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்கள் ஏற்கனவே தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“துறைமுக நகரின் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொது விதிமுறைகள் வரைவு செய்யப்பட்டு அரசிதழுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நிதி விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய ஆறு நிறுவனங்கள் ஏற்கனவே தயாராக உள்ளன.
இங்குள்ள கழிவுநீர் அமைப்புக்கு தேவையான 200 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி எமக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார். துறைமுக நகரத்தில் தற்காலிக வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த வணிகங்களை முக்கிய வணிகத்திலிருந்து அகற்றுகிறோம். இவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.