follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்கள் தயார்

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்கள் தயார்

Published on

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்கள் ஏற்கனவே தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“துறைமுக நகரின் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொது விதிமுறைகள் வரைவு செய்யப்பட்டு அரசிதழுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நிதி விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய ஆறு நிறுவனங்கள் ஏற்கனவே தயாராக உள்ளன.

இங்குள்ள கழிவுநீர் அமைப்புக்கு தேவையான 200 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி எமக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார். துறைமுக நகரத்தில் தற்காலிக வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த வணிகங்களை முக்கிய வணிகத்திலிருந்து அகற்றுகிறோம். இவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...