புதிய அமைச்சரவைக்கு அனைத்தும் தயாராம்..

748

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவையை எவ்வித மாற்றமும் இன்றி முன்வைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் இந்த தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த இரண்டரை வருடங்களுக்கு நிரந்தர அமைச்சரவையை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் சக்தியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி செயற்படாத அமைச்சுக்களும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் மாற்றப்படவுள்ளன.

நெடுஞ்சாலைகள், விளையாட்டு, சுகாதாரம், போக்குவரத்து, கைத்தொழில், மின்சாரம், வனவிலங்கு, சுற்றுச்சூழல் மற்றும் துறைமுகம் ஆகிய அமைச்சுகளுக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த அமைச்சுக்களுக்கு கடந்த காலங்களில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் அமைச்சரவையில் இணைய உள்ளனர்.

ஆனால் இப்போதும் மக்கள் அதிகாரத்தில் இருந்து வரப்போகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here