follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசர்வதேச லயன்ஸ் கழகத்தின் உதவிக்கு ஜனாதிபதி பாராட்டு

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் உதவிக்கு ஜனாதிபதி பாராட்டு

Published on

இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச லயன்ஸ் கழகம் வழங்கியுள்ள ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.

பியகம தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவுவதற்கு லயன்ஸ் கழகம் வழங்கிய உதவியை அவர் வரவேற்றார்.

இளைஞர்களின் ஆக்கத் திறன்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் ஜனாதிபதியின் தொலைநோக்கை நனவாக்குவதற்கு இத்தொழிற்பயிற்சி நிலையம் வழிவகுக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் பிரையன் எட்வர்ட் ஷீஹானுக்கும் இடையில் இன்று (09) கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுக்கவும், இளைஞர் மத்தியில் தீங்கு விளைவிக்கும் மதுபான பாவனையை குறைக்கவும் லயன்ஸ் கழகம் இளைஞர்களின் பங்களிப்புடன் நடத்தியுள்ள போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கும் ஜனாதிபதி விக்ரமசிங்க தனது நன்றியைத் தெரிவித்தார்

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு லயன்ஸ் கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் மகேந்திர அமரசூரியவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 33 வருடங்களாக லியோஸ் அண்ட் லயன்ஸ் கழகத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதிக்கு, சர்வதேச லயன்ஸ் கிளப் தலைவர் நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...