follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

Published on

இன்று உலக சுற்றுலா தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையின் அழகை ரசிக்கும் ஒர் ஆத்மார்த்த அனுபவத்திற்காக உலக சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் ஜனாதிபதி,

பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரை, இலங்கையானது – வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த காலநிலைகளைக் கொண்டதான சுற்றுலாத் தீவாக இருந்து வருகிறது.

சுற்றுலாத்துறையானது, நாட்டுக்குப் பல்வேறு சேவைகளை வழங்குவதன் மூலம் பெரும் அந்நியச் செலவாணியை வாரி வழங்குகினாலும், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அது பாரியளவில் இப்போது செயற்படாமல் இருக்கின்றது.

இருப்பினும் உலகில் பல நாடுகள் பயணங்களுக்கான அனுமதியை வழங்கி வரும் இவ்வேளையில், உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனம் இலங்கையை நோக்கி தற்போது அதிகரித்துள்ளது.

எனவே, இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்த்தெடுப்பதற்காக எமது அரசாங்கம் தனிமைப்படுத்தல் விதிகளின்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதானது சுற்றுலாத் துறையுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகவும் ஆறுதலான ஒரு விடயமாகும்.

இன்றைய நாளில், உலகெங்கும் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளையும் இலங்கையின் அழகை ரசிக்க ஒர் ஆத்மார்த்தமான பயணத்திற்கு வருமாறு நான் அழைக்கிறேன் என்று ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...