follow the truth

follow the truth

August, 10, 2025
Homeஉள்நாடுகாற்றின் தரத்தினை காட்சிப்படுத்தும் புதிய உபகரணம்

காற்றின் தரத்தினை காட்சிப்படுத்தும் புதிய உபகரணம்

Published on

புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டு நாட்டில் வளிமண்டலத்தின் நிலையை அளவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன் மூலம், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள காற்றின் தரம் தானாக அளவிடப்பட்டு, அந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு மூலம் அதன் தரவுகளை பொதுமக்கள் பார்க்க முடியும்.

ஓசோன், கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் காற்றில் உள்ள தூசித் துகள்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்தக் கருவிகளால் அளவிடப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...