follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

Published on

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்ததையடுத்து தபால் சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

எனவே அனைத்து ஊழியர்களும் பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு நள்ளிரவு வரை தொடரும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிவர்த்தனையில் தற்போதுள்ள மேலதிக நேர கொடுப்பனவு முறையை திருத்துதல், இடமாற்றம் மற்றும் முறையீடு சபையில் இருந்து தொழிற்சங்கங்களை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...