follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுஇரவு பொருளாதாரம் இலங்கையின் கலாச்சாரத்தை அழித்துவிடும்

இரவு பொருளாதாரம் இலங்கையின் கலாச்சாரத்தை அழித்துவிடும்

Published on

இலங்கையின் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இரவு பொருளாதாரம் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு தலைமை தாங்குமாறு மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்களையும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

பௌத்தத்தால் போஷிக்கப்பட்ட இலங்கையின் கலாசாரத்தை இரவு பொருளாதாரச் செயற்பாடுகளால் அழிப்பதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்துவிட்டு இலங்கைக்கு வந்துள்ள சிலர் இரவு பொருளாதாரம் மற்றும் கஞ்சா வளர்ப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளனர். இவர்களே இலங்கையை போதைப்பொருள் அற்ற நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாவும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவது பற்றி பேசுகின்றனர்.

பௌத்த தத்துவத்தின் அடிப்படையிலான நமது கலாச்சாரத்தை இரவு பொருளாதாரச் செயற்பாடுகள் அழித்துவிடும்.

எனவே, மதத் தலைவர்கள், குறிப்பாக பௌத்த பிக்குகள் நமது செழுமையான கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97...

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக...