follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇரவு பொருளாதாரம் இலங்கையின் கலாச்சாரத்தை அழித்துவிடும்

இரவு பொருளாதாரம் இலங்கையின் கலாச்சாரத்தை அழித்துவிடும்

Published on

இலங்கையின் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இரவு பொருளாதாரம் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு தலைமை தாங்குமாறு மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்களையும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

பௌத்தத்தால் போஷிக்கப்பட்ட இலங்கையின் கலாசாரத்தை இரவு பொருளாதாரச் செயற்பாடுகளால் அழிப்பதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்துவிட்டு இலங்கைக்கு வந்துள்ள சிலர் இரவு பொருளாதாரம் மற்றும் கஞ்சா வளர்ப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளனர். இவர்களே இலங்கையை போதைப்பொருள் அற்ற நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாவும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவது பற்றி பேசுகின்றனர்.

பௌத்த தத்துவத்தின் அடிப்படையிலான நமது கலாச்சாரத்தை இரவு பொருளாதாரச் செயற்பாடுகள் அழித்துவிடும்.

எனவே, மதத் தலைவர்கள், குறிப்பாக பௌத்த பிக்குகள் நமது செழுமையான கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...