follow the truth

follow the truth

September, 2, 2025
Homeஉள்நாடுபொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவித்தல்

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவித்தல்

Published on

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11 (3)ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இல.42A, முதலிகே மாவத்தை, கொழும்பு 01 மற்றும் இல.57, காலி வீதி கொழும்பு 06 என்ற முகவரிகளில் முறையே அதன் தலைமை அலுவலகத்திலும் கிளையிலும் நாணய மாற்று தொழிலில் ஈடுபடுவதற்கு பிரசன்ன மணி எக்சேஞ்ச் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் தற்காலிக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் மூலம் புரியப்பட்ட இணங்காமைகள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர், பிரசன்ன மணி எக்சேஞ்ச் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கிய DFE/RD/0058 ஆம் இலக்க அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாக இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் ஒருவராக பிரசன்ன மணி எக்சேஞ்ச் (பிறைவேற்) லிமிடெட், நாணய மாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை எனவும், பிரசன்ன மணி எக்சேஞ்ச் (பிறைவேற்) லிமிடெட்டுடன் வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணானதாகக் கருதப்படும் எனவும் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...