ஓமானை தொடர்ந்து ஜோர்தானுக்கும் மனிதக் கடத்தல்

884

ஜோர்தானைப் பரிமாற்ற மையமாகப் பயன்படுத்தி இலங்கையர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காக சட்டவிரோதமான முறையில் அழைத்துச் செல்லும் கடத்தல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த கடத்தல் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், இவ்வாறான அபாயகரமான முறையில் வெளிநாட்டு தொழில்களில் ஈடுபட வேண்டாம் எனவும், இவ்வாறான கடத்தல்காரர்களிடம் அவதானமாக இருக்குமாறும் மக்களை கேட்டுக் கொள்வதாக பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீங்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதாக இருந்தால், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் செல்லுமாறு மக்களைக் கேட்க வேண்டும்.அவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கடத்தல்காரர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 24 மணி நேர தகவல் மையம் 1989 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும். அல்லது 0112864241. புலனாய்வுத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு மக்களைக் கோரவுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஓமான் நாட்டுக்கு இவ்வாறு மனிதக் கடத்தல்களை மேற்கொண்டிருத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் பட்டியலில் அரைவாசிக்கு அரைவாசி முஸ்லிம் முகவர்கள் உள்ளடங்கி இருந்தமையும் சிறுபான்மை முஸ்லிம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரிதும் முஸ்லிம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களே பெரிதும் பங்கு கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here