follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து மைத்திரி தப்ப முடியாது

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து மைத்திரி தப்ப முடியாது

Published on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என, தாக்குதல் நடந்த போது நினைக்காதது போல், இப்போதும் நினைக்கிறார் என்றும் இது அரசாங்கத்தின் நிலைப்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இன்று (13) நாடாளுமன்றத்தில் வாய்மூல பதிலை எதிர்பார்த்து வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் –
“…ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கேள்வியை நான் கேட்கிறேன். வரும் ஏப்ரலில் ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இப்படி கேள்வி கேட்கும் போது இன்னும் 2 வாரம் அவகாசம் கேட்கிறார்கள். இன்று கேள்விகள் கேட்க வேண்டிய நாள். இன்று ஜனாதிபதியும் உங்கள் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றனர். மறுபுறம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்துவதற்கு உங்களின் ஆளும் கட்சி இதற்கு முன்னைய காலங்களில் மிகத் தெளிவாகப் பயன்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்க உங்களின் பக்கம் வந்து பத்திரமாக மலையேறியுள்ளதாலும், மைத்திரிபால சிறிசேன அவருக்கு அரசியல் எதிரியாகி வருவதாலும் இந்தப் பிரச்சினை மேலும் நீடிக்குமா என்பது புரியவில்லை..”

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் –
“.ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் இடம்பெற்ற போது நாட்டின் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், தளபதி, பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் ஒருவரே என்பது ஆரம்பம் முதல் எங்களின் நிலைப்பாடாகும். அதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அப்பொழுதெல்லாம் அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருக்கலாம் என்று அன்று நினைக்கவும் இல்லை, இன்று நினைப்பதுமில்லை. அதுதான் எங்களின் நிலைப்பாடு…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...