follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களுக்கு ‘உளவிழிப்புணர்வு‘ நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்

பாடசாலை மாணவர்களுக்கு ‘உளவிழிப்புணர்வு‘ நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்

Published on

பாடசாலை மாணவர்களின் தவறான நடத்தையைத் தடுக்க உதவும் கல்வித் திட்டமாக, ஒவ்வொரு பாடசாலையிலும் ஆன்மீகம்,நற்பண்பு, பிரார்த்தனை உள்ளிட்டவற்றை வளர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன் பிறகு, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 7.40 மணி வரை 10 நிமிடங்களுக்கு இத்திட்டம் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக...

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...