follow the truth

follow the truth

July, 27, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரச சாட்சியாளராக 'மோட்டிவேஷன் அப்பச்சி'

அரச சாட்சியாளராக ‘மோட்டிவேஷன் அப்பச்சி’

Published on

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை வான்கார்ட் சோசலிச கட்சி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து ஆர்ப்பாட்டத்தினை பலவந்தமாக அழித்தமைக்கான சாட்சியங்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சாட்சியத்தை ஆரம்பத்தில் போராட்டத்தில் முன்னணியில் இருந்த ‘மோட்டிவேஷன் அப்பச்சி’ என்ற சமூக ஊடக செயற்பாட்டாளரான பியூமல் சமரசிங்க வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் தெரிவித்தார்.

காலி முகத்திடலைச் சுற்றி போராட்டம் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னெடுப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பினால் போராட்ட இயக்கம் கடத்தப்பட்டு, அழிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

தேஷபந்து இல்லாவிட்டாலும் ‘யுக்திய’ தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என்று...

அரசாங்கம் தோற்றால் சில ஊடக நிறுவனங்களின் கதி என்ன என்று தெரியவில்லை.. மூட வேண்டியும் வரலாம்..

ஆட்சியில் இருப்பவர்கள் தோற்றால் என்ன நடக்கும் என்று சில ஊடகங்களுக்குத் தெரியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய...