follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரச சாட்சியாளராக 'மோட்டிவேஷன் அப்பச்சி'

அரச சாட்சியாளராக ‘மோட்டிவேஷன் அப்பச்சி’

Published on

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை வான்கார்ட் சோசலிச கட்சி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து ஆர்ப்பாட்டத்தினை பலவந்தமாக அழித்தமைக்கான சாட்சியங்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சாட்சியத்தை ஆரம்பத்தில் போராட்டத்தில் முன்னணியில் இருந்த ‘மோட்டிவேஷன் அப்பச்சி’ என்ற சமூக ஊடக செயற்பாட்டாளரான பியூமல் சமரசிங்க வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் தெரிவித்தார்.

காலி முகத்திடலைச் சுற்றி போராட்டம் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னெடுப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பினால் போராட்ட இயக்கம் கடத்தப்பட்டு, அழிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...