follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுபுதிதாக பிறக்கும் சிசுக்களுக்கும் அடையாள அட்டை

புதிதாக பிறக்கும் சிசுக்களுக்கும் அடையாள அட்டை

Published on

இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அச்சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வயது வந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கும்போது அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை பயன்படுகிறது. எனவே, இலங்கையை பொருத்தமட்டில் சிறுவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் செயற்பாடு நடைமுறையில் இல்லை இதனால் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளின்போது  அவர்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...