follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுIMF உதவி இல்லாவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும்

IMF உதவி இல்லாவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும்

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அல்லது இல்லாவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

நாம் தற்போது பாரிஸ் கழகம், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட எமது இரு தரப்பு கடன் கொடுநர்களிடமிருந்து நிதி உறுதிப்பாட்டை பெறும் நடவடிக்கையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்

அத்துடன், இந்த நடவடிக்கையை மத்திய வங்கி முழுமையாக கைவிட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகிய போதும் பேச்சுவார்த்தையை இடைநிறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறோம் என்றும் அதனை பூரணப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்வதகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்

மேலும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு குறுங்கால அல்லது நீண்டகால மறுசீரமைப்பை செய்ய வேண்டும் என்றும் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி,...

நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி...