வைத்தியர்களின் ஓய்வு வயதை திருத்தியமைத்து வர்த்தமானி அறிவித்தல்

343

அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, விசேட வைத்திய அதிகாரி, அரசு வைத்திய அதிகாரி, பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசுப் பதிவு வைத்திய அதிகாரி ஆகிய பதவிகளின் கட்டாய ஓய்வு வயது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்தின்படி ஏற்கனவே 63 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு முன் ஓய்வு பெற வேண்டும்.

62 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 63 வயது நிறைவடைந்ததும், 61 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 62 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வு பெற வேண்டும்.

60 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 61 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும், 59 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும் புதிய திருத்தத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஜனவரி முதல் திகதிக்கும் ஜூன் 30 ஆம் திகதிக்கும் இடையில் பிறந்த நாள் கொண்ட மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட ஆண்டின் ஜூன் 30 ஆம் திகதி வரை பணியாற்ற வாய்ப்பு உள்ளது.

ஜூலை மாதம் முதலாம் திகதிக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த தினமான வைத்தியர்களுக்கு குறித்த வருடத்தின் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை சேவையாற்றுவதற்கு அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை அமுலுக்கு வரும்.

வைத்தியர்களின் ஓய்வு வயதை திருத்தியமைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here