follow the truth

follow the truth

August, 28, 2025
Homeஉள்நாடுடயனா கமகேவிற்கு எதிரான பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கம்

டயனா கமகேவிற்கு எதிரான பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கம்

Published on

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிமாக நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, குறித்த வௌிநாட்டுப் பயணத்தடை 05 நாட்களுக்கு நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 18 ஆம் திகதி, சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீடித்தார்.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் ஐந்து நாட்களுக்கு தடையை தளர்த்தியுள்ளது.

அத்துடன், விரிவான விசாரணை அறிக்கையை 2023 ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...