follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1உயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து ஜனாதிபதி ஓரங்கட்டப்பட்டார்

உயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து ஜனாதிபதி ஓரங்கட்டப்பட்டார்

Published on

உயிர்த்த ஞாயிறு அன்று நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கை அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் கிடப்பில் போடுமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விசாரிக்க, நீதிபதி நுவன் தாரக ஹினடிகல தீர்மானித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறுதினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த தருணம் இலங்கையிலும் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடுவதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியில் ஆலயங்களில் திருப்பலியில் பங்கேற்றபோது இந்த பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...