follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுகல்வி வலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

கல்வி வலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

Published on

ஆயிரம் பாடசாலைகளுக்கு சுமார் 100 கோடி ரூபா செலவில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கல்வியை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த கல்வி தவணையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இதனை தவிர நாடு முழுவதும் உள்ள 100 கல்வி வலயங்களை 120 வலயங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

கல்வி வலயங்களின் எண்ணிக்கையை அதிகரித்த பின்னர் ஆசிரியர்களின் நிர்வாக பிரச்சினைகளை தீர்ப்பது இலகுவாக இருக்கும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...