follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுலக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு : பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு

லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு : பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு

Published on

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தனர்.

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...