follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுலக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு : பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு

லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு : பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு

Published on

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தனர்.

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...