பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் : CID விசாரணை

466

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணை இன்று (17) குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மற்றும் அவரது வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை (10) இரவு மாணர்கள் சிலரால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் 12 பல்கலை மாணவர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இப்பின்னணியிலான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 12ம் திகதி குறித்த  சம்பவம் தொடர்பில் 6 மாணவர்கள் பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது

இது தொடர்பில் மேலும் 6 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் அவர்களில் 4 பேரை கடந்த  13ம் திகதி பொலிஸார் கைது செய்தனர்

பொலிஸாரின் விசாரணை மூலம்  கடந்த சனிக்கிழமை இரவு  (10) பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அவரது மகனின் கார் மோதியதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் ஏற்பட்டட வாக்குவாதத்தை தொடர்ந்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here