உலகக் கிண்ண கால்பந்து: குரோஷியா – மொராக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை

319

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 3 ஆம் இடத்தைப் பிடிப்பதற்காக குரோஷியா மற்றும் மொராக்கோ அணிகள் இன்று சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

உலகக் கிண்ண போட்டிக்கு முன் ஆபிரிக்க அணிகளை சந்தித்த குரோஷியா, 2014 கேமரூனை 4-0 எனவும், 2018 இல் நைஜீரியாவை 2-0 எனவும் வீழ்த்திய அனுபவம் கொண்டிருக்கிறது.

1998-ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியிலும் இதேபோல் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடிய குரோஷியா, அதில் நெதா்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மொராக்கோ அணி, உலகக் கிண்ண போட்டியில் ஆப்பிரிக்க அணியாக இந்த இடத்துக்கு வருவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடம்பெறும் போட்டியில் வெற்றிபெற்ற 3 ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெண்கலப் பதக்கமும் பரிசும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here