follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP3இலங்கைக்கு நிபந்தனை வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு நிபந்தனை வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

Published on

கடன் மறுசீரமைப்பை ஆதரிப்பதாக இலங்கையின் கடனாளி நாடுகள் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் வரை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன்களை அங்கீகரிக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற முக்கிய கடன் வழங்கும் நாடுகளும், பாரிஸ் கிளப்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக இலங்கை மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்ற வேண்டும் எனவும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியம் இரண்டாவது பணிப்பாளர் கூட்டத்தை நடத்தவுள்ள ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு முன்னர் அரசாங்கம் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றி கடன் வழங்கும் நாடுகளின் பரிந்துரைகளைப் பெற்றால், முன்மொழியப்பட்ட கடன்தொகை முதல் பகுதிக்கு இலங்கை அங்கீகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...