follow the truth

follow the truth

May, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாவிக்டர் ஐவன் - பசில் ராஜபக்ஷ இடையே விசேட கலந்துரையாடல்

விக்டர் ஐவன் – பசில் ராஜபக்ஷ இடையே விசேட கலந்துரையாடல்

Published on

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பலமான சமூக செயற்பாட்டாளருமான விக்டர் ஐவன் மற்றும் பொஹொட்டுவ ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

நெலும் மாவத்தை பொஹொட்டுவ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் விக்டர் ஐவன் மற்றும் சமூக ஆர்வலர்கள் இருவர் இணைந்து கொண்டனர். பசில் ராஜபக்ஷவுடன் பொஹொட்டு பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

அண்மைய ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படையான போராட்டம் தொடர்பில் பசில் ராஜபக்ஷ மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் விசேட கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர். போராட்டத்தைப் பாதித்த சமூகப் பிரச்சினைகளில் பலராலும் கவனிக்கப்படாத சாதி அழுத்தமும் இருப்பதாக விக்டர் ஐவன் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், போராட்டம் குறித்து சிறப்பு ஆய்வை மேற்கொண்டதாகவும், இலங்கையில் வலுவான சமூகப் பிரச்சினையாக உள்ள சாதி ஒடுக்குமுறையை இல்லாதொழிக்க அரசியல் கட்சிகள் தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொஹொட்டுவவை கடுமையாக விமர்சிக்கும் விக்டர் ஐவனுக்கும், பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்புசுமார் ஒன்றரை மணிநேரம் மிகவும் சுமுகமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...

புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு...

சஜித் மற்றும் அநுரவின் விவாதத்திற்கு பொது விடுமுறை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை...