follow the truth

follow the truth

August, 27, 2025
Homeஉள்நாடுபயிற்சி இன்றி பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல முடியாது

பயிற்சி இன்றி பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல முடியாது

Published on

அடுத்தவருடம் மார்ச் மாதத்திற்கு பின்னர் வீட்டு பணிப்பெண் தொழிலுக்கு இல்லங்களில் இருந்து யாரையும் அனுப்புவதில்லை எனவும் சிறந்த பயிற்சி பெற்றவர்களை மாத்திரமே அனுப்ப தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலை பணியகத்தின் பதிவு செய்யுமாறே நாங்கள் தெரிவிக்கிறோம் . அவ்வாறு பதிவு செய்துவிட்டு செல்வோர் அங்கு ஏதாவது பிரச்சனைக்கு முகம் கொடுக்க நேரிட்டால் அதில் தலையிட்டு எம்மால் நடவடிக்கை எடுக்கமுடியும்

5 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளின் தாய்மார் வெளிநாட்டிற்கு செல்லமுடியாது என ஒரு சட்டம் இருந்தது ஆனால் அவர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்

அதனால் இந்த சட்டத்தை இன்னும் இலகுவாக்கி 2 வயதிற்கு குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல தடைவிதித்துள்ளோம்

மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வீட்டு பணிப்பெண் தொழிக்குக்கு அனுப்பாமல் இருக்க தீர்மானித்திருக்கிறோம், அவ்வாறு அனுப்புவதாக இருந்தால் அது தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்றவர்களை மாத்திரமே அனுப்ப தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...