follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுஇரண்டு மாதங்களுக்குள் பெறுபேறுகள்

இரண்டு மாதங்களுக்குள் பெறுபேறுகள்

Published on

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் நடைபெற்றது.

இந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 334,698 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

இதேவேளை, கல்கமுவ எஹெதுவெவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பொறுப்பாசிரியர் ஒருவர் தவறான வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழு இன்று காலை கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...