“விரைவில் தேர்தல் நடக்காது”

555

எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தலையும் நடத்த அரசாங்கம் தயாராக இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாடசாலை அதிபர்களுடன் ஊடகவியலாளர் சந்திப்பு (19) அன்று ஹட்டன் ஹைலண்ட்ஸ் தேசிய பாடசாலையில் இடம்பெற்றதாக எஸ்.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த எஸ்.அரவிந்த குமார், நாடு பல பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள வேளையில் தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல.

தனக்கு தெரிந்த வரையில் விரைவில் தேர்தல் நடத்தப்படாது என்றும், அரசாங்கத்தில் உள்ள எந்த கட்சியும் அதற்கு தயாராக இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றவில்லை எனவும், தற்போதுள்ள ஒவ்வொரு அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு தமது அமைச்சு அனைத்து பிராந்திய கல்வி பணிப்பாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளதாகவும், அதற்காக பொலிஸாரின் ஆதரவை பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிதி ரீதியாக பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளதால், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் போசாக்கின்மையால் அவதிப்படுவதாகவும், அந்த நிலையிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களை மேம்படுத்தி வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும்.இவ்வாறு செய்தியாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here