follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுபோதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

Published on

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஆய்வு வெற்றியடைய வேண்டுமாயின் பாடசாலைக்கு போதைப்பொருள் வரும் பிரதான பாதைகளை அடைக்க வேண்டும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்துகாப்பதற்கு , போதைப்பொருள் கொண்டு வரும் முக்கிய விநியோகஸ்தர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தண்டிக்கப்படுவது போல் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவர்களையும் தண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவது போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த அமைச்சர், போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடலிலும் வானிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

LATEST NEWS

MORE ARTICLES

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா...