follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுதேர்தலை நடத்தும் நிலையில் நாடு இல்லை

தேர்தலை நடத்தும் நிலையில் நாடு இல்லை

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டிய சூழல் தற்போது இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்திருந்தார்.

ஒரு குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறைமை குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தன பரிசீலித்து, கலந்துரையாடி அதன் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பதை தேர்தல்கள் பற்றி பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது என்று கூறும் அவர், அதற்கு விதிவிலக்கான வழிமுறைகள் பின்பற்றப்படலாம் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

முறையான தேர்தல் முறைமை அமைக்கப்படும் வரை தேர்தலை ஒத்திவைப்பது சட்டவிரோதமானது அல்ல என யூ.ஆர். டி சில்வா மேலும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...