follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுதேர்தலை நடத்தும் நிலையில் நாடு இல்லை

தேர்தலை நடத்தும் நிலையில் நாடு இல்லை

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டிய சூழல் தற்போது இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்திருந்தார்.

ஒரு குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறைமை குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தன பரிசீலித்து, கலந்துரையாடி அதன் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பதை தேர்தல்கள் பற்றி பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது என்று கூறும் அவர், அதற்கு விதிவிலக்கான வழிமுறைகள் பின்பற்றப்படலாம் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

முறையான தேர்தல் முறைமை அமைக்கப்படும் வரை தேர்தலை ஒத்திவைப்பது சட்டவிரோதமானது அல்ல என யூ.ஆர். டி சில்வா மேலும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...